Geetham Geetham Jaya Jaya Geetham lyrics

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம்


1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்    புரண்டுருண்டோடுதுபார் – அங்கு    போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ    புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம்


2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுங்கள் – தாம்
    கூறின மாமறை விட்டனர் கல்லறை
    போங்கள் கலிலேயாவுக்கு –
ஆ ஆ கீதம்


3. அன்னா காய்பா ஆரியர் சங்கம்
    அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
    பூத கணங்கள் இடி ஒலி கண்டு
    பயந்து நடுங்குகின்றார்


4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
    வருகிறார் ஜெயவீரன் – நம்
    மேள வாத்தியம் கை மணி பூரிகை
    எடுத்து முழங்கிடுவோம



కామెంట్‌లు లేవు

Blogger ఆధారితం.